மேடம் ப்ளீஸ் ஒரு ஆட்டோகிராஃப்” என்று தன்னிடம் புத்தகங்களை நீட்டுபவர்களுக்கு ‘நைஸ் மீட்டிங் யூ' என்று கையெழுத்திட்டுப் புன்னகைக்கிறார் பர்கா தத்!
மூளையைக் கசக்கி ‘இன்ட்ரோ நரேஷன்' எழுதும் அளவுக்குப் பரிச்சயம் இல்லாதவர் அல்ல பர்கா தத். இந்திய தொலைக்காட்சி ஊடகத்தின் பெண் முகம். ‘யூ ஆர் வாட்சிங் தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்' என்று அவர் தொலைக்காட்சியில் தெரியும்போது, பல வீடுகளின் வரவேற்பறைகளில் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவர்கள் நிமிர்ந்து உட்காரும் ‘ஜெஸ்சரில்' தெரிந்துகொள்ளலாம் அவர் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை!
அதேபோல ‘வீ த பீப்பிள்' நிகழ்ச்சியில் விவாதத்துக்கு அவர் தேர்வு செய்யும் விஷயங்கள் அத்தனையும் படு சீரியஸ்! நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை அவர் கையாளும் விதம் அறிவார்த்தமானது!
இத்தனை நாள் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சமீபத்தில் தன் ஊடக அனுபவங்களைப் பக்கம் பக்கமாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ‘திஸ் அன்கொயட் லேண்ட்' எனும் அந்தப் புத்தகத்தில், இந்திய தொலைக்காட்சி ஊடகம் விரிவடையத் தொடங்கிய காலம் தொட்டு (1991) இப்போது வரையிலான சமகால இந்திய வரலாற்றை சொல்லிச் செல்கிறார் பர்கா.
முதன்முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர் கார்கில் போர்தான். அதற்கு முக்கியக் காரணம் பர்கா தத். போரை நேரடியாகப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் செய்தியாளர் இவரே! “குண்டுகள் விழ, பதுங்கு குழியில் இருந்துகொண்டு, ஒரே உடை, என சுமார் 15 நாட்கள் ராணுவ வீரர்களோடு போரைப் பதிவு செய்தது எனக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத்தந்தது” என்று அவர் சொல்லும்போது நம்மால் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் கடந்த வாரம் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
பெண்கள், போர், தீவிரவாதம், காஷ்மீர், மத வன்முறை உள்ளிட்ட தலைப்புகளில் உங்கள் புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். இவை நீங்களே தேர்வு செய்துகொண்டதா அல்லது உங்கள் அனுபவங்களை எழுத எழுத அந்தத் தலைப்புகளே உங்களைத் தேடி வந்தனவா?
தலைப்புகள் எல்லாம் என்னைத் தேடி வரவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பித்தேன். தவிர, இந்த விஷயங்களை எல்லாம் நான் ‘ரிப்போர்ட்' செய்திருக்கிறேன். ஆக, எனக்குப் பரிச்சயமான விஷயங்களைத்தான் நான் இதில் எழுதியிருக்கிறேன்.
புத்தகம் எழுத எவ்வளவு காலம் ஆனது?
சொல்லப்போனால் இந்தப் புத்தகம் நான்கு வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். கடைசியில் சென்ற ஆண்டு எழுதத் தொடங்கினேன்.
நீங்கள் சிறுமியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானதைப் பற்றி முதன்முதலாக இந்தப் புத்தகத்தின் மூலம் கூறியிருக்கிறீர்கள். ‘இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்கிறோமே' என்று பயமோ, தயக்கமோ உங்களுக்கு ஏற்படவில்லையா?
நான் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒன்று நான் சிறுமியாக இருந்தபோது எனது தூரத்து உறவினர் ஒருவரால் நான் 'செக்ஷுவல் அப்யூஸு'க்கு ஆளானேன். அப்புறம், டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் என்னுடன் பயின்ற ஒருவரை விரும்பினேன். சில காரணங்களால் எங்கள் இருவருக்குள் வேறுபாடுகள் தோன்றின. அப்போது அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் ஆழமான காயத்தை ஏற்படுத்தின. பெண்ணுரிமை குறித்து நானே பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். பல இடங்களில் பேசியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது நாம் ஏன் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். நான் செய்தது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இதை நான் சொல்லாமல் போயிருந்தால் அது எனக்குத்தான் அவமானம். இன்டலெக்சுவலாகவும், எமோஷனலாகவும் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவுதான்!
உங்களுடைய ‘சோர்ஸ்களை' எப்படிப் பிடிக்கிறீர்கள்?
ரொம்பவும் சிம்பிள்! நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். அது பி.ஆர்.ஓ. ஆக இருந்தாலும் சரி. பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஆனாலும் சரி. நம்முடைய ‘ஸ்டோரி' எவ்வளவு ஸ்ட்ராங் ஆக இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, நம்முடைய சோர்ஸ் எப்படியிருக்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.
இன்றைக்கு ‘சோஷியல் மீடியா' ரொம்ப வலுவாக இருக்கிறதே. அது ‘மெயின்ஸ்ட்ரீம்' ஊடகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
சோஷியல் மீடியாவால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதே சமயம் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு விஷயத்தைப் பதிவேற்றியவுடன் உடனே லைக்ஸ், கமென்ட்ஸ், ரீட்வீட்களை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் பிரபலமாக விரும்புகிறார்கள். நாம் பிரபலமாவதற்காகப் பிறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய டி.வி. ‘ஆங்கரிங்' என்பது ஒரு நிகழ்த்துக் கலை போல ஆகிவிட்டதே...
எப்படிச் சொல்கிறீர்கள்?
ஒரே கூச்சல், விருந்தினர்களைப் பேசவே விடாமல் செய்வது...
என்னுடைய நிகழ்ச்சிகளில் நீங்கள் அதுபோன்ற விஷயங்களைப் பார்க்க முடியாது.
உங்கள் போட்டியாளர்கள்...
அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அப்படிச் செய்வதில்லை! நமது அரசியல் கட்சிகள் நம் ஊடகங்களை அமெரிக்கத்தனமாக மாற்றிவிட்டன. ‘அமெரிக்கனை சேஷன் ஆஃப் மீடியா' என்று நான் சொல்வேன். ஒவ்வொரு அரசியல் கட்சியும் டி.வி.யில் தன் சார்பாகப் பேசுவதற்கு ஆட்களை வைத்திருக்கிறது. கட்சிகள் இன்றைய நாட்களில் அதிகளவு ‘மீடியா சென்ட்ரிக்' ஆக வளர்ந்துவிட்டன. ஆனால் குறைந்த அளவே ‘டெமாக்ரடிக்' ஆக இருக்கின்றன.
தமிழகத்தில் அரசால் தொடர்ந்து ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்படியா? அரசே அவதூறு வழக்குப் போடுகிறதா? அது மிகவும் தவறு. ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்வது அடிப்படைக் கருத்துரிமை. இதுபோல வழக்குகள் போடுவதால் ஊடகங்களை மவுனமாக்கிவிட முடியாது.
இந்தக் கேள்விக்கு நீங்கள் பலமுறை பதிலளித்திருப்பீர்கள். ஆனாலும் கேட்கிறேன். 2ஜி வழக்கில் உங்கள் பெயர் அடிபட்டதே?
எனது ஊடக வாழ்க்கையில் என்னை ரொம்பவும் காயப்படுத்திய விஷயம் அது. ஏனென்றால் அது என் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மத வன்முறை, தீவிரவாதத் தாக்குதல் போல 2ஜி விஷயமும் எனக்கு ஒரு ‘ஸ்டோரி' தான். பி.ஆர்.ஓ.க்களிடம் எப்படிப் பேசுவோமோ அப்படித்தான் நீரா ராடியாவுடன் ஸ்பெக்ட்ரம் குறித்து சில தகவல்களைப் பெறுவதற்காகப் பேசினேன். மற்றவர்களைப் போல ராடியாவும் எனக்கு ஒரு ‘சோர்ஸ்' தான். மற்றபடி இன்று வரைக்கும் நான் ராசாவை நேரில் பார்த்ததில்லை.
வளரும் பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடல். கிராமத்திலிருந்து வரும் பெண்கள், நகரத்திலிருந்து வரும் பெண்கள்... ஊடகத்தில் யாரால் அதிகம் பிரகாசிக்க முடியுமென்று கருதுகிறீர்கள்?
கிராமம், நகரம் என்பதெல்லாம் முக்கியமல்ல. திறமை இருந்தால் போதும். வேறு எந்த வித்தியாசமும் எடுபடாது! மற்றபடி, பர்கா தத்தைப் போல வரவேண்டுமென்று முயற்சிக்க வேண்டாம். ‘ஜஸ்ட் பீ யுவர்செல்ஃப்!' அதுதான் உங்களை வெற்றி பெற வைக்கும்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நிகழ்வுகளை வடக்கத்திய ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே...
அது உண்மைதான்! இந்த விமர்சனத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதான் பர்கா தத்!
மூளையைக் கசக்கி ‘இன்ட்ரோ நரேஷன்' எழுதும் அளவுக்குப் பரிச்சயம் இல்லாதவர் அல்ல பர்கா தத். இந்திய தொலைக்காட்சி ஊடகத்தின் பெண் முகம். ‘யூ ஆர் வாட்சிங் தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்' என்று அவர் தொலைக்காட்சியில் தெரியும்போது, பல வீடுகளின் வரவேற்பறைகளில் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவர்கள் நிமிர்ந்து உட்காரும் ‘ஜெஸ்சரில்' தெரிந்துகொள்ளலாம் அவர் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை!
அதேபோல ‘வீ த பீப்பிள்' நிகழ்ச்சியில் விவாதத்துக்கு அவர் தேர்வு செய்யும் விஷயங்கள் அத்தனையும் படு சீரியஸ்! நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை அவர் கையாளும் விதம் அறிவார்த்தமானது!
இத்தனை நாள் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சமீபத்தில் தன் ஊடக அனுபவங்களைப் பக்கம் பக்கமாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ‘திஸ் அன்கொயட் லேண்ட்' எனும் அந்தப் புத்தகத்தில், இந்திய தொலைக்காட்சி ஊடகம் விரிவடையத் தொடங்கிய காலம் தொட்டு (1991) இப்போது வரையிலான சமகால இந்திய வரலாற்றை சொல்லிச் செல்கிறார் பர்கா.
முதன்முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர் கார்கில் போர்தான். அதற்கு முக்கியக் காரணம் பர்கா தத். போரை நேரடியாகப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் செய்தியாளர் இவரே! “குண்டுகள் விழ, பதுங்கு குழியில் இருந்துகொண்டு, ஒரே உடை, என சுமார் 15 நாட்கள் ராணுவ வீரர்களோடு போரைப் பதிவு செய்தது எனக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத்தந்தது” என்று அவர் சொல்லும்போது நம்மால் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் கடந்த வாரம் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
பெண்கள், போர், தீவிரவாதம், காஷ்மீர், மத வன்முறை உள்ளிட்ட தலைப்புகளில் உங்கள் புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். இவை நீங்களே தேர்வு செய்துகொண்டதா அல்லது உங்கள் அனுபவங்களை எழுத எழுத அந்தத் தலைப்புகளே உங்களைத் தேடி வந்தனவா?
தலைப்புகள் எல்லாம் என்னைத் தேடி வரவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பித்தேன். தவிர, இந்த விஷயங்களை எல்லாம் நான் ‘ரிப்போர்ட்' செய்திருக்கிறேன். ஆக, எனக்குப் பரிச்சயமான விஷயங்களைத்தான் நான் இதில் எழுதியிருக்கிறேன்.
புத்தகம் எழுத எவ்வளவு காலம் ஆனது?
சொல்லப்போனால் இந்தப் புத்தகம் நான்கு வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். கடைசியில் சென்ற ஆண்டு எழுதத் தொடங்கினேன்.
நீங்கள் சிறுமியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானதைப் பற்றி முதன்முதலாக இந்தப் புத்தகத்தின் மூலம் கூறியிருக்கிறீர்கள். ‘இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்கிறோமே' என்று பயமோ, தயக்கமோ உங்களுக்கு ஏற்படவில்லையா?
நான் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒன்று நான் சிறுமியாக இருந்தபோது எனது தூரத்து உறவினர் ஒருவரால் நான் 'செக்ஷுவல் அப்யூஸு'க்கு ஆளானேன். அப்புறம், டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் என்னுடன் பயின்ற ஒருவரை விரும்பினேன். சில காரணங்களால் எங்கள் இருவருக்குள் வேறுபாடுகள் தோன்றின. அப்போது அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் ஆழமான காயத்தை ஏற்படுத்தின. பெண்ணுரிமை குறித்து நானே பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். பல இடங்களில் பேசியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது நாம் ஏன் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். நான் செய்தது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இதை நான் சொல்லாமல் போயிருந்தால் அது எனக்குத்தான் அவமானம். இன்டலெக்சுவலாகவும், எமோஷனலாகவும் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவுதான்!
உங்களுடைய ‘சோர்ஸ்களை' எப்படிப் பிடிக்கிறீர்கள்?
ரொம்பவும் சிம்பிள்! நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். அது பி.ஆர்.ஓ. ஆக இருந்தாலும் சரி. பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஆனாலும் சரி. நம்முடைய ‘ஸ்டோரி' எவ்வளவு ஸ்ட்ராங் ஆக இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, நம்முடைய சோர்ஸ் எப்படியிருக்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.
இன்றைக்கு ‘சோஷியல் மீடியா' ரொம்ப வலுவாக இருக்கிறதே. அது ‘மெயின்ஸ்ட்ரீம்' ஊடகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
சோஷியல் மீடியாவால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதே சமயம் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு விஷயத்தைப் பதிவேற்றியவுடன் உடனே லைக்ஸ், கமென்ட்ஸ், ரீட்வீட்களை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் பிரபலமாக விரும்புகிறார்கள். நாம் பிரபலமாவதற்காகப் பிறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய டி.வி. ‘ஆங்கரிங்' என்பது ஒரு நிகழ்த்துக் கலை போல ஆகிவிட்டதே...
எப்படிச் சொல்கிறீர்கள்?
ஒரே கூச்சல், விருந்தினர்களைப் பேசவே விடாமல் செய்வது...
என்னுடைய நிகழ்ச்சிகளில் நீங்கள் அதுபோன்ற விஷயங்களைப் பார்க்க முடியாது.
உங்கள் போட்டியாளர்கள்...
அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அப்படிச் செய்வதில்லை! நமது அரசியல் கட்சிகள் நம் ஊடகங்களை அமெரிக்கத்தனமாக மாற்றிவிட்டன. ‘அமெரிக்கனை சேஷன் ஆஃப் மீடியா' என்று நான் சொல்வேன். ஒவ்வொரு அரசியல் கட்சியும் டி.வி.யில் தன் சார்பாகப் பேசுவதற்கு ஆட்களை வைத்திருக்கிறது. கட்சிகள் இன்றைய நாட்களில் அதிகளவு ‘மீடியா சென்ட்ரிக்' ஆக வளர்ந்துவிட்டன. ஆனால் குறைந்த அளவே ‘டெமாக்ரடிக்' ஆக இருக்கின்றன.
தமிழகத்தில் அரசால் தொடர்ந்து ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அப்படியா? அரசே அவதூறு வழக்குப் போடுகிறதா? அது மிகவும் தவறு. ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்வது அடிப்படைக் கருத்துரிமை. இதுபோல வழக்குகள் போடுவதால் ஊடகங்களை மவுனமாக்கிவிட முடியாது.
இந்தக் கேள்விக்கு நீங்கள் பலமுறை பதிலளித்திருப்பீர்கள். ஆனாலும் கேட்கிறேன். 2ஜி வழக்கில் உங்கள் பெயர் அடிபட்டதே?
எனது ஊடக வாழ்க்கையில் என்னை ரொம்பவும் காயப்படுத்திய விஷயம் அது. ஏனென்றால் அது என் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மத வன்முறை, தீவிரவாதத் தாக்குதல் போல 2ஜி விஷயமும் எனக்கு ஒரு ‘ஸ்டோரி' தான். பி.ஆர்.ஓ.க்களிடம் எப்படிப் பேசுவோமோ அப்படித்தான் நீரா ராடியாவுடன் ஸ்பெக்ட்ரம் குறித்து சில தகவல்களைப் பெறுவதற்காகப் பேசினேன். மற்றவர்களைப் போல ராடியாவும் எனக்கு ஒரு ‘சோர்ஸ்' தான். மற்றபடி இன்று வரைக்கும் நான் ராசாவை நேரில் பார்த்ததில்லை.
வளரும் பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடல். கிராமத்திலிருந்து வரும் பெண்கள், நகரத்திலிருந்து வரும் பெண்கள்... ஊடகத்தில் யாரால் அதிகம் பிரகாசிக்க முடியுமென்று கருதுகிறீர்கள்?
கிராமம், நகரம் என்பதெல்லாம் முக்கியமல்ல. திறமை இருந்தால் போதும். வேறு எந்த வித்தியாசமும் எடுபடாது! மற்றபடி, பர்கா தத்தைப் போல வரவேண்டுமென்று முயற்சிக்க வேண்டாம். ‘ஜஸ்ட் பீ யுவர்செல்ஃப்!' அதுதான் உங்களை வெற்றி பெற வைக்கும்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நிகழ்வுகளை வடக்கத்திய ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே...
அது உண்மைதான்! இந்த விமர்சனத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதான் பர்கா தத்!
No comments:
Post a Comment