ஆமை வேகத்தில் தமிழக சிலை கடத்தல் வழக்குகள் ( December 15, 2013)
அரியலூர் மாவட்ட ஐம்பொன் சிலைகள் அமெரிக்கக் கலைக்கூடத்துக்கு கடத்தப்பட்ட வழக்கில் சிக்கி புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர், விசாரணைக்காக அவ்வப்போது அரியலூர் நீதிமன்றங்களுக்கு ஆஜராவது தவிர தமிழகத்தில் சிலை திருட்டு வழக்கு கிடப்பிலேயே உள்ளது.
ஆனால் சுபாஷ் கபூரிடம் டாலர்களை கொட்டி சிலை வாங்கிய வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் சுதாரித்துக்கொண்டு சுபாஷ் மீது வழக்குத் தொடுக்க ஆயத்தமாகியுள்ளன.
கபூருக்கு உதவிய சஞ்சீவி
கேரள பூர்வீகத்தோடு தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருந்த சஞ்சீவி அசோகன் தொடர்பு கிடைத்ததும் கபூரின் கனவு நனவானது. அரியலூர் கிராம கோவில்களில் இருந்து சஞ்சீவி மூலமாக அமெரிக்காவில் இருக்கும் கபூரின் கைக்கு ஐம்பொன் சிலைகள் சென்று சேரும். நிம்பஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் கபூர் ஆரம்பித்த ஏற்றுமதி நிறுவனம் மூலமாக தமிழகத்தின் கைவினைப்பொருட்கள் குவியலில் இந்த ஐம்பொன் சிலைகளும் பக்காவாக மறைத்து வைக்கப்பட்டு கடல் கடந்தன.
கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கடை செழித்தது. நிழல் வர்த்தகம் தந்த வருமானம், அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்து ஹாங்காங், துபாய், ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எல்லாம் கலைப்பொருள் விற்பனை என்ற பெயரில் கடை விரிக்க வைத்தது. மெய்நிகர் உலகத்திலும் கடைவிரிக்கும் ஆசையில் ஒரு இணையதளம் ஆரம்பித்தபோது, சர்வதேச மாஃபியாக்களை மோப்பமிடும் இன்டர்போல் மூக்கில் வேர்க்க வைத்தது.
கைமாறிய பணம்
இன்டர்போல் அறிவுறு த்தலில் கபூர் கடையும் கணக்குவழக்குகளையும் அமெரிக்க போலீஸார் ஆராய ஆரம்பித்தனர். அமெரிக்க கபூரின் கணக்கிலிருந்து சென்னை சஞ்சீவி அசோகன் கணக்குக்கு கோடிக்கணக்கில் பணம் போனதும் இன்டர்போல் சுதாரித்தது. இப்படியான வேட்டை தமிழக போலீஸாரை அரியலூரில் வந்து நிறுத்தியது.
சிலை கடத்தல் தொடர்பாக 2011 அக். 30-ல் சுபாஷ் கபூர் ஃபிராங்க்பர்ட்டில் கைதானார். தமிழக போலீஸார் ஜெர்மனி சென்று கபூரை அழைத்துவந்தனர். களத்தில் இறங்கிய தமிழக சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் கபூர் கைக்கு போன சிலைகளின் புள்ளி விவரத்தை சேகரிக்க ஆரம்பித்தனர்.
கபூர், சஞ்சீவி கணக்கில் வரவு வைத்த தொகைகள் மட்டுமே ரூ.1,16,37,694 மற்றும் 1,01,10,418 என தெரியவந்திருக்கிறது. அப்படியெனில் திருடப்பட்ட விக்கிரங்களை விற்ற வகையில் கபூர் பார்த்த கோடிகள் ஏராளம். தற்போதைய விசாரணையில் இருக்கும் சுத்தமல்லி ஸ்ரீபுரத்தான் சம்பவங்கள் 2008-ல் நடந்தது. அதற்கு முந்தைய கபூரின் சிலை கடத்தல் கண்ணிகளில் கை வைத்தால் எங்கெங்கோ வெடிக்கும் என்கிறார்கள்.
புராதன சிலைகள் பறிமுதல்
ஆனால் அமெரிக்காவில் கபூர் குடும்பம் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறது. அங்கு மேடிசன் அவென்யூ 89வது தெருவில் இருக்கும் கபூரின் கலைக்கூடத்தை நிர்வகித்து வந்த அவரது சகோதரி சுஷ்மா சரீன் மற்றும் மகள் மம்தா சாகரை மடக்கிய அந்நாட்டு போலீஸார் அவர்கள் மறைத்து வைத்திருந்ததாக 4 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இவற்றின் மதிப்பு சுமார் 14.3 மில்லியன் டாலர்களாம். கைப்பற்றபட்டவை அரியலூரின் சோழர்காலத்து புராதன சிலைகள் எனத் தெரிகிறது.
நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் சுபாஷ் கபூர் குடும்பத்தினர் தொடர்பான சிலைக் கடத்தல் வழக்கில், கபூரிடமிருந்து ஆறு சிலைகளை ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் அருங்காட்சியகம் வாங்கியிருக்கும் தகவல் வெளியானது. இதையடுத்து விருத்தாசலம் பகுதியிலிருந்து இருந்து கடத்தப்பட்டதாக சொல்லப்படும் அரத்தநாரீஸ்வரர் சிலை அருங்காட்சியக பார்வையிலிருந்து அதன் நிர்வாகம் அகற்றி இருக்கிறது. தொடர்ந்து மீதமுள்ள ஐந்து சிலைகளை அடையாளம் காணும் பணியையும் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சுபாஷ் கபூர் மற்றும் அவரது நிறுவனம் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 200 சிலைகள் மோடியிடம் ஒப்படைப்பு தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளையும் அமெரிக்கா வழங்கியது (
புதன், ஜூன் 08,2016)
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 200 சிலைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா வழங்கியது.
வாஷிங்டன்,
தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன், வெண்கல சாமி சிலைகள் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன.
அங்கு இந்த சிலைகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் சிலைகள் திருட்டும், கடத்தலும் தொடர்ந்தது.
சுபாஷ் கபூர்
இதுபோல் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழக கோவில்களின் சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன.
சிலை கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ் கபூர் என்பவர் அமெரிக்காவில் ஒரு விற்பனைக் கூடமே அமைத்து சாமி சிலைகளை விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுபாஷ் கபூர், ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முறைப்படி ஒப்படைப்பு
அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்ட சாமிசிலைகள் தற்போது பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் அமெரிக்க அரசு, தான் மீட்ட சிலைகளை நேற்று முன்தினம் முறைப்படி ஒப்படைத்தது.
இதற்கான நிகழ்ச்சி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுசில் நடந்தது. அப்போது 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.650 கோடி) மதிப்புள்ள 200 சிலைகளை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இவற்றில் பெரும்பாலானவை, ஐம்பொன், வெண்கல சிலைகள், டெரகோட்டா பொம்மைகள் மற்றும் கற்சிலைகள் ஆகும். இவற்றில் சில 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.
மாணிக்கவாசகர் சிலை ரூ.10 கோடி
இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்த சிலைகளுடன் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் சிலை, கி.பி. 850-1250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த துறவி மாணிக்கவாசகர் வெண்கல சிலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பு மட்டும் ரூ.10 கோடி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலைகளை திரும்பப் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
மிகப்பெரிய இணைப்பு
சிலைகள் ஒப்படைப்பு இந்தியா-அமெரிக்கா இடையேயான கலாசார உறவில் மிகப்பெரிய இணைப்பை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.
இந்திய கோவில்களில் திருடி கடத்தப்பட்ட கலாசார சிறப்புவாய்ந்த சாமி சிலைகளை கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் ஒப்படைத்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும், அவைகளின் விசாரணை முகமைகளும் சிலை கடத்தலில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இவை, சாமி சிலை கடத்தலை தடுப்பது மட்டுமின்றி அவற்றை தங்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தும் வருகின்றன.
ஒபாமாவுக்கு நன்றி
இந்த பொக்கிஷங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிக்க நன்றி. இதன் மூலம் எங்களின் கடந்த காலம் எங்களுடன் இணைந்து இருக்கிறது. சிலர் இந்த கலைப்பொருட் களை பணரீதியாக மதிப்பீடு செய்யலாம். அவை பல லட்சம் இருக்கும் என்றும் கூறலாம்.
எங்களைப் பொறுத்தவரை எங்களின் கடந்த கால கலாசாரமும், பாரம்பரியமும் எங்களுடன் இணைந்து இருக்கிறது. எங்களின் மதிப்பை உயர்த்தி உள்ளது.
சுற்றுலா பயணிகள்
சுற்றுலா வரும் பயணிகள் நவீன வசதிகள் கொண்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புவதில்லை. இதுபோன்ற கலாசார, வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் (கோவில்கள்) பார்க்க வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவின் பண்டைய நாகரிகம் அவர்களை ஈர்க்கிறது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரிக நகரங்களைக் காண்பதற் காக சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு அதிக அளவில் வருகிறார்கள். இந்த பொக்கிஷங்கள் உலகம் முழுவதையும் ரசிக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பம் சட்டவிரோதமாக சிலைகளை கடத்துவோரை பிடிக்க உதவியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே.சிங் கூறும்போது, ‘‘இந்நிகழ்ச்சியின்போது 12 சிலைகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மற்ற சிலைகளும் விரைவில் முறைப்படி பெறப்படும்” என்றார்.
மோடி அஞ்சலி
முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்ததும், தனது பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வாஷிங்டன் நகரில் உள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்றார்.
அங்கு, கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறிய விபத்தில் 2003-ம் ஆண்டு பலியான இந்திய வம்சாவளி வீராங் கனை கல்பனா சாவ்லா மற்றும் 6 விண்வெளி வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்பனா சாவ்லா குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 சிலைகள் அமெரிக்காவில் மீட்பு: கோயில் விவரத்தை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கண்டறிந்தது(January 23, 2016)
தமிழகத்தைச் சேர்ந்த 3 கடவுள் சிலைகள் அமெரிக்காவில் மீட்கப் பட்டுள்ளன. இச்சிலைகள் காணா மல்போன கோயில்கள் பற்றிய விவரத்தை புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பாரம்பரிய கோயில்கள் உள்ளன. கிராமப் பகுதிகளில் உள்ள பல கோயில் களில் இருந்த ஐம்பொன் சிலை கள் மற்றும் கற்சிலைகள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. சிலைக் கடத்தல்காரர்களை கண்ட றிந்து சிலைகளை போலீஸார் மீட்ப தற்கு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் முக்கிய உதவிபுரிகிறது.
தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் மற்றும் பல ஊர்களில் உள்ள பழ மையான கோயில்கள், வடமாநில கோயில்களில் பிரெஞ்சு ஆய்வு நிறுவனக் குழு ஆய்வு நடத்தி புகைப்படங்களை சேகரித்துள்ளது. இங்கு, சுமார் 1.5 லட்சம் திருக் கோயில் சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உரிய ஆதாரங் களுடன் உள்ளன. கடந்த 1956-ல் தொடங்கிய இப்பணி தற்போது வரை தொடர்கிறது.
பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தி லுள்ள புகைப்படத்தை ஆதாரமாக கொண்டுதான் தமிழகத்தின் புரந்தன் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டின் நேஷனல் கேலரியில் இருப்பது தெரிந்தது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட உமாமகேஷ்வரி சிலை சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சி யகத்தில் உள்ளது தெரிந்தது. இக்கோயிலில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சிலைகளை சுபாஷ் சந்திர கபூர் தலைமையிலான கும்பல் கடத்தி அயல்நாடுகளில் விற்றது தெரிந்தது. சுபாஷ் கைதானதும் நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட் கப்பட்டன. இந்த கோயிலில் இருந்து திருடப்பட்ட வெண்கலத்தினாலான மாணிக்கவாசகர் சிலையும் அண்மையில் மீட்கப்பட்டது.
அமெரிக்க போலீஸ் தகவல்
இதுபோல, அமெரிக்காவி லுள்ள குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐசிஇ) தரப்பானது கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்த விசாரணையில் ஏராள மான சிலைகளை கைப்பற்றியுள் ளன. இந்நிலையில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை யைச் சேர்ந்தோர் தற்போது தமி ழகத்திலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சில சிலைகளின் புகைப்படங்களை அளித்தனர். அதையடுத்து அந்த குழுவினர் புகைப்படங்களிலுள்ள சிலைகள் அனைத்தும் எந்த கோயிலைச் சேர்ந்தவை என்பதை கண்டறியு மாறு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பினர்.
தற்போது, அவற்றில் கணபதி, பைரவர், நர்த்தன சம்பந்தர் ஆகிய 3 கற்சிலைகளின் விவரங் கள் தெரியவந்துள்ளன. இதுதொடர் பாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன வட்டாரங்கள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை யைச் சேர்ந்த (US Department of Homeland Security) வல்லுநர்கள் கடந்த ஆண்டு புதுச்சேரிக்கு வந்து சிலைகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த னர். தற்போது இதேபோல மற் றொரு குழுவினர் தங்கள் வசமுள்ள சிலைகளின் புகைப்படங்களை தமிழகத்துக்கு தந்துள்ளனர். தமி ழகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் தந்த புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு ஆவணங்கள் மற்றும் சிலைகளுடன் ஒப்பீடு செய்தோம். அப்போது, அந்த சிலைகள் விழுப் புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேந்தமங்கலத்திலுள்ள ஆபத் சகாய ஈஸ்வரன் கோயிலில் இருந்து காணாமல் போனவை என தெரிந்து தகவல்களை உறுதி செய்துள்ளோம். இனி இதுதொடர் பாக தமிழக சிலை கடத்தல் பிரிவினர் உரிய நடவடிக்கை எடுப்பர்" என்று குறிப்பிட்டனர்.
சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்
தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிலில் திருடப்பட்ட சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அடையாளம் காட்டினார்கள்.
அதிகாரிகள் ஆய்வு
தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் போலீசார் மீட்டுள்ள சிலைகளில் கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் உள்ளதா? என்று அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக ஆய்வுப்பணி நடந்தது.
கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய மண்டலங்களில் இருந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று தீனதயாளன் வீட்டிற்கு வந்திருந்தனர். ஏராளமான கோவில் பூசாரிகளும் தீனதயாளன் வீட்டில் கூடிவிட்டார்கள். இதனால் கூட்டம் அலைமோதியது. தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டுப் போன சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.
2 சிலைகள் கண்டுபிடிப்பு
நேற்று காலையில் தொடங்கிய இந்த ஆய்வு பணி மாலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் திருச்சி மண்டல அறநிலையத்துறை அதிகாரி கல்யாணி அவரது பகுதியில் உள்ள 2 கோவில்களில் திருட்டு போன சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தார். திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள முல்லால் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவிலில் 10 வருடங்களுக்கு முன்பு சிவகாம சுந்தரி அம்மன் சிலை திருட்டு போய்விட்டது. இதேபோல பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் இருக்கும் அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள திருமுக்தீஸ்வரர் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு பிரம்மாவின் சிலையும் திருட்டு போய்விட்டது.
இந்த 2 சிலைகளும் தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்டுள்ள சிலைகளில் இருப்பதை அதிகாரி கல்யாணி அடையாளம் காட்டினார். இதன்மூலம் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை தீனதயாளன் சட்டவிரோதமாக வாங்கி பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.
கைதாவாரா?
தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்டுள்ள சிலைகளை மத்திய மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர். இந்த சிலைகள் பழங்கால சிலைகள் தானா? என்பது பற்றி தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுக்க வேண்டும்.
தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளின் இந்த ஆய்வுஅறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். இந்த ஆய்வுஅறிக்கை கிடைத்தவுடன் போலீசார் அடுத்த கட்ட கைது நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தீனதயாளன் வீட்டில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக தீனதயாளனும், அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தீனதயாளன் வீட்டில் குவிந்த 100 பூசாரிகள்: 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணி தீவிரம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் 3 இடங்களில் 285 சிலைகளை பதுக்கி வைத்திருந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கடந்த மாதம் 31-ந்தேதி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் சரண் அடைந்தார்.
அவரது கூட்டாளிகளான மான்சிங், ராஜா, குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தீனதயாளனை மட்டும் போலீசார் கைது செய்யவில்லை. தொடர்ந்து 17 நாட்களாக தீனதயாளனிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலை கடத்தலில் பின்னணி பற்றியும், உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் அவரிடம் பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.
தீனதயாளனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணியில் போலீசாரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளை பார்த்து தங்களது பகுதிகளில் உள்ள கோவில்களில் காணாமல் போன சிலைகள் தீனதயாளனின் வீட்டில் உள்ளதா? என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக தினமும் பல்வேறு ஊர்களில் இருந்தும் கோவில் நிர்வாகிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள் ஆகியோர் தீனதயாளனின் வீட்டுக்கு இன்றும் வந்திருந்தனர்.
சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கோவில்களின் பெயர் மற்றும் காணாமல் போன சிலைகள் ஆகியவற்றின் பெயர்களை கூறி போலீசாரிடம் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை மஞ்சக்குடியில் உள்ள விஸ்வநாதர் சாமி கோவிலில் 10 சிலைகள் காணாமல் போயிருப்பதாக அங்கிருந்து வந்தவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனார் சிலை ஒன்றும், கரூர் கிருஷ்ணாபுரம் அம்மன் கோவிலில் பிடாரி சிலை ஒன்றும் புதுக்கோட்டை கஞ்சனூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஒரு சிலையும் காணாமல் போயுள்ளது. இக்கோவிலின் நிர்வாகிகளும் தீனதயாளனின் வீட்டுக்கு வந்திருந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மடங்களில் ஓவியங்களும் காணாமல் போய் உள்ளன. இந்த ஓவியங்களை அடையாளம் காணவும் அப்பகுதிகளில் இருந்து மடங்களின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனால் தீனதயாளன் வீடு இருக்கும் முர்ரேஸ் கேட் சாலை பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
இன்று ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும், மாயமான எங்க ஊரு சாமி சிலைகள் திரும்ப கிடைக்குமா? என்கிற ஏக்கத்துடன் குவிந்திருந்தனர். இவர்கள் அனைவரும் காணாமல் போன சாமி சிலைகளின் பழைய போட்டோக்கள் மற்றும் அந்த சிலைகள் பற்றிய தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.
இவைகளை குறித்து வைத்துக் கொண்ட போலீசார், உங்கள் பகுதியில் காணாமல் போன சிலைகள், தீனதயாளனின் வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அது நிச்சயமாக திருப்பி ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இப்படி சிலைகளை அடையாளம் காணும் பணி ஒரு பக்கம் தீவிரம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், தீனதயாளன் சென்னை மற்றும் பெங்களூரில் மேலும் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த இடங்களில் சோதனை நடத்துவதற்காக கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும் சென்னை மற்றும் பெங்களூரில் தீனதயாளன் பதுக்கி வைத்துள்ள சிலைகளும் பறிமுதல் செய்யப்படும்.
இதற்கான சோதனையில் போலீசார் விரைவில் ஈடுபட உள்ளனர். இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் விரைவில் பெங்களூர் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சோதனைக்கு பின்னர் தீனதயாளன் பற்றி மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்து அற நிலையதுறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாகவும் தங்களது ஆய்வு பணியை தொடர்ந்தனர்.
தீனதயாளன் வீட்டில் குவிந்த 100 பூசாரிகள்: 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணி தீவிரம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் 3 இடங்களில் 285 சிலைகளை பதுக்கி வைத்திருந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கடந்த மாதம் 31-ந்தேதி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் சரண் அடைந்தார்.
அவரது கூட்டாளிகளான மான்சிங், ராஜா, குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தீனதயாளனை மட்டும் போலீசார் கைது செய்யவில்லை. தொடர்ந்து 17 நாட்களாக தீனதயாளனிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலை கடத்தலில் பின்னணி பற்றியும், உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் அவரிடம் பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.
தீனதயாளனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணியில் போலீசாரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளை பார்த்து தங்களது பகுதிகளில் உள்ள கோவில்களில் காணாமல் போன சிலைகள் தீனதயாளனின் வீட்டில் உள்ளதா? என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக தினமும் பல்வேறு ஊர்களில் இருந்தும் கோவில் நிர்வாகிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள் ஆகியோர் தீனதயாளனின் வீட்டுக்கு இன்றும் வந்திருந்தனர்.
சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கோவில்களின் பெயர் மற்றும் காணாமல் போன சிலைகள் ஆகியவற்றின் பெயர்களை கூறி போலீசாரிடம் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை மஞ்சக்குடியில் உள்ள விஸ்வநாதர் சாமி கோவிலில் 10 சிலைகள் காணாமல் போயிருப்பதாக அங்கிருந்து வந்தவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனார் சிலை ஒன்றும், கரூர் கிருஷ்ணாபுரம் அம்மன் கோவிலில் பிடாரி சிலை ஒன்றும் புதுக்கோட்டை கஞ்சனூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஒரு சிலையும் காணாமல் போயுள்ளது. இக்கோவிலின் நிர்வாகிகளும் தீனதயாளனின் வீட்டுக்கு வந்திருந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மடங்களில் ஓவியங்களும் காணாமல் போய் உள்ளன. இந்த ஓவியங்களை அடையாளம் காணவும் அப்பகுதிகளில் இருந்து மடங்களின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனால் தீனதயாளன் வீடு இருக்கும் முர்ரேஸ் கேட் சாலை பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
இன்று ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும், மாயமான எங்க ஊரு சாமி சிலைகள் திரும்ப கிடைக்குமா? என்கிற ஏக்கத்துடன் குவிந்திருந்தனர். இவர்கள் அனைவரும் காணாமல் போன சாமி சிலைகளின் பழைய போட்டோக்கள் மற்றும் அந்த சிலைகள் பற்றிய தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.
இவைகளை குறித்து வைத்துக் கொண்ட போலீசார், உங்கள் பகுதியில் காணாமல் போன சிலைகள், தீனதயாளனின் வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அது நிச்சயமாக திருப்பி ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இப்படி சிலைகளை அடையாளம் காணும் பணி ஒரு பக்கம் தீவிரம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், தீனதயாளன் சென்னை மற்றும் பெங்களூரில் மேலும் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த இடங்களில் சோதனை நடத்துவதற்காக கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும் சென்னை மற்றும் பெங்களூரில் தீனதயாளன் பதுக்கி வைத்துள்ள சிலைகளும் பறிமுதல் செய்யப்படும்.
இதற்கான சோதனையில் போலீசார் விரைவில் ஈடுபட உள்ளனர். இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் விரைவில் பெங்களூர் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சோதனைக்கு பின்னர் தீனதயாளன் பற்றி மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்து அற நிலையதுறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாகவும் தங்களது ஆய்வு பணியை தொடர்ந்தனர்.
No comments:
Post a Comment